கந்தர் சஷ்டியாம் கௌரி காப்பாம்
கடவுளை வேண்டி கனமான விரதமாம்
மரணவீடு செல்லக் கூடாதாம்
செலவு வீட்டில் உண்ணக் கூடாதாம்
உற்றோர் அழுதிட உறவுகள் கதறிட
உள்ளே இருந்து உத்தம விரதமாம்
உறவை மறந்து விரதம் இருக்க
உனக்கு எந்தக் கடவுள் சொன்னார்?
மனிதம் உலகில் வாழத்தானே
மதத்தின் பேரில் மார்க்கம் தந்தார்
மதத்தின் பேரில் மார்க்கம் – தந்து
மனிதம் தன்னை மறத்தல் முறையோ
அராலியூர் அருட்செல்வம்