வெட்டு ஒன்று துண்டு ரண்டு சொல்லாதீங்க
வெளிப்படையாய் வார்த்தைகளைக் கொட்டிடாதீங்க
அமைதியாக இருப்பவனை நம்பாதீங்க – அவன்
அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கிறாங்க
நரிகள் வாழும் பூமியிது சொல்லுறேனுங்க
நல்லவன்போல் எல்லாரும் நடிக்கிறானுங்க
அமைதியாக இருப்பவனே அறிவாளியாம்
அடுத்தவன் வம்புக்கவன் போவதில்லையாம்
நேருக்குநேர் கேட்டுவிட்டால் கோபக்காரனாம்
நெத்தியடி கொடுத்துவிட்டால் அகங்காரனாம்
முகத்துக்குநேர் சொல்லுதற்கு துணிவு இல்லீங்க
முதுகுக்குப் பின் நரிக்கதைகள் பரப்புறானுங்க
ஊருக்கெல்லாம் அமைதியாக நடிக்கிறானுங்க
உள்ளுக்குள்ளே சுயநலமாய்ச் சுத்துறானுங்க
கொள்கை என்ற ஒன்றை மட்டும் கேட்டுடாதீங்க
நரிகள் அதை விற்று ரொம்ப நாளாச்சுங்க
நரிகள் இங்கே நல்லவராய் சுத்துறாருங்க
நல்லவர்க்கு வாழ இங்கு முடியாதுங்க
அராலியூர் அருட்செல்வம்
No comments:
Post a Comment