பொய்யாய் வாழ்க்கை
பணத்துக்காகப் பொய் பதவிக்காகப் பொய்
மண்ணுக்காகப் பொய் பொன்னுக்காகப் பொய்
சொத்துக்காகப் பொய் சுகத்துக்காகப் பொய்
பகட்டுக்காகப் பொய் பவிசுக்காகப் பொய்
நல்லவனாக உலகில் உன்னை
நயமாய்க் காட்டிட ஆயிரம் பொய்கள்
உறவைப் பிரித்திட எத்தனை பொய்கள்
ஊரைக் குழப்பிட எத்தனை பொய்கள்
பொய்யும் புழுகும் ஊரில் இன்று
புயலில் கலையும் புழுதியாகிட
உண்மை இங்கே ஊமையாகுது
நேர்மை இங்கே நிலைகுலையுது
பொய்யால் பொய்யாய் வாழும் மனிதா
பொய்யைப் பொறுப்பாய் உணர்வாய் ஒருநாள்
திரு அருள்
No comments:
Post a Comment