Monday, 20 May 2024

ஊருக்குபதேசம்

 உலகைப் பார்த்தேன் உரக்கச் சிரித்தேன்
உண்மை சொன்னால் உதைப்பார் தானோ
ஊருக்கெல்லாம் உரக்கச் சொல்வார்
உள்ளுக்குள்ளே சிரித்துக்கொள்வர்

தமிழே தமிழே இனிமை என்பார்
தமிழின் பெருமை உரக்கச் சொல்வார்
தமிழே அறியாத் தமது பிள்ளை
தட்டிக்கேட்க யாருமில்லை

உரிமை வேண்டும் வேண்டும் என்று
உரக்கப் பாடு தமிழா என்பார்
ஊரைவிட்டு ஒழிந்து ஓடி
உலகில் எங்கோ பதுங்கிக் கொள்வார்

சீதனம் என்றால் அசிங்கம் என்று
சிறப்பாய் விறைப்பாய் மேடைப் பேச்சு
சீதனம் கேட்டு சினப்பார் வீட்டில்
சீவியம் வைக்கா வீடும் வேண்டும்

கோயில் கட்டக் காசு வேண்டும்
கோரிக்கைதான் போட்டால் போதும்
கொடுத்தால் தானே தருவார் கடவுள்
கோடி ரூபாய் கொட்டுமையா

பசியால் வாடும் உறவு ஒன்று
பத்தோ நூறோ கேட்டால் போதும்
காசு விளையும் மரத்தை நாமும்
காணவில்லைத் தோழா என்பார்

நன்றி மறவா நாணயம் வேண்டும்
நலமாய் எமக்குக் கற்றுத் தந்தார்
பணத்தைப் பார்த்தே உறவைச் சொல்வார்
பண்பும் இங்கே தொலைந்தே போச்சே!!!

காசு

காசு காசு காசு என்று அலைகிறாரு பாரு
காசுக்கிங்கே மதிப்பை அள்ளித் தருகிறாரு பாரு


காசு என்றால் வாயை இங்கே பிளக்கிறாரு பாரு
வாயில் போன ஈயைக் கூட மறக்கிறாரு பாரு

காசுக்காக ஊரு ஊராய் அலையுறாரு பாரு
காசு தானே வாழ்க்கை என்று நினைக்கிறாரு பாரு

வேறு ஊரு சென்ற பின்னே ஏங்கிறாரு பாரு
நம்ம ஊரு சொர்க்கம் என்று புலம்பிறாரு பாரு

நம்ம ஊரு வந்து அவர் சுற்றுவாரு பாரு
காசு இல்லா ஏழை வாசல் மறந்திடுவார் பாரு

காசு வந்து சேர்ந்தபோது சூழும் சொந்தம் பாரு
அந்தக் காசு உன்னை நீங்கி விட்டால் ஓடிவிடும் பாரு

காசு உள்ள மாப்பிள்ளைக்காய் ஏங்கிறாரு பாரு
கண்ணியத்தை யாரு இங்கே தேடுறாரு பாரு

காசுக்காரன் சொன்னதெல்லாம் வேதமாச்சு பாரு
காசைக்காட்டி ஊரையெல்லாம் வாங்கிறாரு பாரு

ஒற்றுமையாய் ஊரில் வாழ்ந்த காலமெல்லாம் போச்சு
காசு வந்து நம்ம ஊரு நாசமாகப் போச்சு

பாட்டி தந்த கவளம் இன்னும் இனிக்கிறதைப் பாரு
அதனை வாங்க கோடி பணம் போதாது பாரு

காசு மட்டும் வாழ்க்கை இல்லைப் புரிந்திடுவாய் பாரு
அப்போ எட்டி நின்ற ஏழைச் சொந்தம் உதவிடுமே பாரு

சொர்க்கம்

சொர்க்கம் எங்கே சொர்க்கம் எங்கே
சொல்லடா என்று கேட்டது என்மனம்

பணமே சொர்க்கம் என்றே கூறி
தினமும் அலையும் மனிதர் கண்டேன்

புகழே சொர்க்கம் என்று நினைத்து
புகழின் பின்னே அலைந்தோர் கண்டேன்

மானம் காக்கும் மனமது தானே
மகிழ்ச்சி தந்த சொர்க்கம் என்றார்

கற்றல்தானே சொர்க்கம் என்று
கற்றார் கூற நானும் கேட்டேன்

குழந்தைச் சிரிப்பில் சொர்க்கம் காணும்
குழந்தை மனங்கள் நானும் கண்டேன்

ஏழைச் சிரிப்பில் இன்பம் காண்டார்
அதுவே தங்கள் சொர்க்கம் என்றார்

ஆண்டவன் அடியைப் போற்றுதல்தானே
அடியார் எமக்குச் சொர்க்கம் என்றார்

வெற்றி ஒன்றே சொர்க்கம் என்று
வியர்வை சிந்தி உழைப்போர் கண்டேன்

மான்விழி காட்டி மயக்கும் பெண்ணே
மனிதர் எமக்குச் சொர்க்கம் என்றார்

மற்றோர் துன்பம் களைவது தானே
மனிதன் தேடும் சொர்க்கம் என்றார்

உந்தன் சொர்க்கம் எங்கே என்று
உள்ளம் உரைக்கக் கேட்பாய் மனிதா!!!!

       திரு. அருள்

மகிழ்ச்சி

பள்ளியில் பெற்றேன் பரீட்சையில் முதலிடம்
பாய்ந்து ஓடினேன் வீட்டினில் சொல்ல

கையில் பரிசு கண்டதும் என்னைக்
கனிவாய்க் கட்டி அணைத்திடும் அம்மா
கம்பீரமாய் ஒரு பார்வை பார்த்து
பரிவாய் முதுகில் தட்டிடும் அப்பா

அருமையான வேலை ஒன்றை
அழகாய்த் தந்தான் கடவுள் எனக்கு
இருவர் கையையும் இதமாய்ப் பிடித்து
எடுத்து வைத்தேன் முதற் சம்பளத்தை 

எத்தனை மகிழ்ச்சி எத்தனை உணர்ச்சி
கண்டேன் சொர்க்கம் பெற்றோர் கண்ணில்
எங்கே கிடைக்கும் இந்தச் சொர்க்கம்
எதிலே கிடைக்கும் இத்தனை சுகம்

தொலைந்தது இன்பம்

நண்பர்கள் எல்லாம் நாலு மணிக்கு
நந்நீர் கிணற்றில் நலமாய்க் கூடினர்

குனிந்த தலையும் குமுட்டுச் சிரிப்பும்
குமரிகள் வந்தனர் குடிநீர் அள்ளிட

திருவிழா வந்தது காளையர் கூடினர்
கச்சானும் வாங்கினர் கன்னியும் தேடினர்

பத்துத் நாளும் பத்து விதத்தில்
மொத்த ஊரும் பக்தியில் உருகும்

வெள்ளை வேட்டியும் பட்டுச் சால்வையும்
வெற்றுமார்புடன் சுற்றி வந்தனர்

கழுத்திலும் கையிலும் பொன்னது மின்னிட
காஞ்சிபுரத்துடன் கண்கவர் மேனியர்

வானம் பார்த்து வயல்களை உழுது
வளமாய் வாழ்ந்த காலமும் போச்சு

கிளித்தட்டும் கிட்டிப்புள்ளும்
நிதமும் ஆடிய காலமும் போச்சு

பனம் பழமும் பனங்கட்டிக் கூழும்
அரைச்ச குழம்பும் அரிசிமாப் புட்டும்

வட்டமாய் அமர்ந்து கூட்டமாய் உண்டு
கும்மாளம் போட்ட முற்றமும் போச்சு

மாற்றம் ஒன்றே மாறாமல் போச்சு
மானிடம் இங்கே தொலைந்தே போச்சு

கடவுள் பேசினால்

 மனிதா!!


முயற்சிதான் நான்
முழுதாய் எனை.நம்பு
படிக்காமல் நீ திரிந்து
பலநேர்த்தி தனைப் போட்டு
பரீட்சைப் பெறுபேறு
பாங்காய் நீ கேட்டால்???????

உண்மைதான் நான்
உரக்கக் கூறிடு
உலகத்துப் பொய் எல்லாம்
உனக்காய்ச் சொல்லியே
எல்லாம் அவன் செயல்!!!
என்றொரு வரியினை
எடுத்து நீ இயம்பினால்
என்னடா நான் செய்வேன்?

தன்னம்பிக்கை என்பது
நான்தான் மனிதா!!
உன்னை நம்பிடு
உலகை வென்றிடு
உன்னை நம்பிட
உள்ளம் மறுத்தால்
ஆயிரம் நேர்த்திகள்
அழகாய்ச் செய்யினும்
வெற்றி என்பது
வெறுமனே கனவுதான்!!!

அடுத்தவன் மகிழ்ச்சியில்
ஆனந்தம் கண்டிடு
அதுதான் நான் என
அழகாய் நம்பிடு.
ஏழையின் கல்விக்கு
எந்நாளும் உதவிடு
இல்லாத மனிதனின்
பசியைப் போக்கிடு
ஏழையின் சிரிப்பினில்
எனை நீ கண்டிடு

ஆண்டவன் படைப்பு

 வெற்றிகள் எத்தனைதோல்விகள் எத்தனை?
சிந்தித்துப் பார்க்கையில் விந்தைகள் எத்தனை?

வெற்றிக் களிப்பினில் உள்ளம் குளித்திட
மிடுக்காய் நடந்த கணங்கள் எத்தனை?

தோல்வியைக் கண்டு துவண்டு கலங்கியே
துக்கத்தில் உளன்ற கணங்கள் எத்தனை?

ஏழ்மையில் நாமும் உழன்ற போதிலே
எட்டி ஓடிய உறவுகள் எத்தனை?

ஏழையே ஆயினும் எனது உறவென்று
தூக்கி நிறுத்திய உறவுகள் எத்தனை?

செல்வம் கையிலே கொழிக்கும் போதிலே
சிரித்து ஒட்டிய உறவுகள் எத்தனை?

தன்னலம் தன்னலம் தன்னலம் என்று
தமக்காய் வாழும் சிந்தைகள் எத்தனை?

அடுத்தவர் உயர்வில் இன்பம் கண்டு
அன்பே சிவமாய் வாழ்பவர் எத்தனை?

பக்திப் பழமாய் வெள்ளை வேட்டி
பண்பே இன்றி வாழ்பவர் எத்தனை?

எத்தனை மனங்கள் எத்தனை குணங்கள்
எல்லாம் அவனே படைத்தவை தானே

விருப்பு வெறுப்பு இல்லா இறைவன்
விரும்பிப் படைத்த உலகம் கண்டோம்

ஆசை இல்லா அன்புக் கடவுள்
அழகாய்ப் படைத்த உலகம் கண்டோம்

අම්මා

අම්මා අම්මා අම්මා
හැමවෙලේම ඔනේ අම්මා

මම මුලින්ම දැක්කේ අම්මා
මට මුලින්ම දැනුනා අම්මා

මම මුලින්ම කිව්වේ අම්මා
මම මුලින්ම ලිව්වේ අම්මා

මට ළඟටම ඕනේ අම්මා
ගරු කරන්නට ඕනේ අම්මා

ඔයාගේ සිත හොඳයි අම්මා
හැමදාම වදින්නේ අම්මා

ඔයාට සමාන ලෝකයේ
කවුරුත් නෑනේ අම්මා

මගේ හදවතින් පිරී ඇත අම්මා
මට සදහටම ඕන අම්මා

அகந்தை

 யாருக்கில்லை அகந்தைஇங்கு
யாருக்கில்லை அகந்தை

கற்றவன் என்றால்
வித்துவச் செருக்கு

காசைக் கண்டவன்
செல்வச் செருக்கு

பலமாய் இருந்தால்
அதிலொரு செருக்கு

புகழில் மிதந்தால்
அதிலும் செருக்கு

அழகாய் இருந்தால்
அதற்கொரு செருக்கு

கலையில் சிறந்தால்
அதுவும் செருக்கு

கண்ணகி காட்டிய
கற்பிலும் செருக்கு

நற்கவி பாரதி
நாவினிற் செருக்கு

நக்கீரர் காட்டினார்
நற்றமிழ்ச் செருக்கு

எமனேறும் பரியே
என்று பாடிய

ஔவையின் பாட்டிலும்
தொங்குது செருக்கு

வரத்தினைப் பெற்ற
சூரனின் அகந்தை

 

அதனை அழித்தது
முருகனின் அகந்தை

துட்டனாக்கியது
துரியனின் அகந்தை

அவனை அழித்தது
பீமனின் அகந்தை

சிவனை வணங்கும்
சித்தர்கள் ஆயினும்

சிந்தை எங்கும்
அகந்தை தானே

சிவனுக்கிருந்தது
அதுவும் செருக்கு

சிவனுடன் மோதிய
உமையவள் செருக்கு

எனக்கும் இருக்கும்
உனக்கும் இருக்கும்

உலகில் இங்கே
எவர்க்கும் இருக்கும்

செருக்குடன் வாழ்ந்தால்
மகிழ்வும் இருக்கும்

செருக்கைக் கண்டால்
வெறுப்பும் இருக்கும்

செருக்கில் மிதந்தால்
அழிவும் இருக்கும்

செருக்கே செருக்கால்
செருப்பாய் அழியும்

வாழ்க்கை

அன்பு - அது
இதயத்தின் மொழி

அழுகை - அது
கோழையின் இயலாமை

முயற்சி - அது
வெற்றிக்கு அத்திவாரம்

பணிவு - உன்னை
உயரவைக்கும் ஏணி

பட்டம் - உனது
உயர்வைக் காட்டும் கண்ணாடி

பதவி - உனக்குப்
பெருமை சேர்க்கும் பொன்விலங்கு

பணம் - உன்
இதயத்தை இரும்பாக்கும் இரசாயனம்

மமதை - உன்னைத்
தனிமைப்படுத்தும் பம்பரம்

இளமை - நீ
சாதிக்கும் காலம் இது

முதுமை - உன்னை, உலகை
உணரும் நேரமிது

அம்மா

 பக்கத்தில்  உனையிருத்தி
பக்குவமாய்   சோறூட்டி
பைந்தமிழ் பல பயின்று
பள்ளிக்கு அனுப்பி வைத்தாள் !!


உனை வளர்த்து  ஆளாக்க
அவள் பட்ட துன்பங்கள்???
நீ உலகில்  வளம் பெறவே 
அவள் போட்ட வேண்டுதல்கள்????

நீயின்று வெளி நாட்டில்
உன் அன்னை தனி வீட்டில்.
பரிமழக்கா  பாத்திடுவா
பணமிங்கு நானனுப்ப.

பணத்திற்கு பாசத்தை
யார் தருவார் இவ்வுலகில்?
பட்டு மெத்தை நீ கொடுத்தால்
பாசமதை யார் தருவார்?

உன் அன்னை அன்றுன்னை
விடுதிக்கு அனுப்பி விட்டு
உலகெங்கும் தான் சுற்றி
ஊரில் உன்னை விட்டிருந்தால்???

அப்போது புரிந்திருப்பாய்
அன்னையவள் அருமைதனை!!
இப்போது உன் தேவை
பை நிறையப் பணம்  தானே??

வயோதிபர் விடுதிக்கு
உன் பிள்ளை  உனையனுப்பும்.
இல்லையேல் தனக்கொரு
தனி வீ டு  தேடிவிடும்.

அன்றுதான் நீ உணர்வாய்
அன்னையவள் வலியதனை.
அப்போதும் கூட ......
வானிலே உன் அன்னை
வணங்கிடுவாள் உனக்காக!!!!!!!!!!!

அன்னை

அன்னை மடி சொர்க்கமடி
வஞ்சம் அங்கு இல்லையடி


அன்பு மட்டும் வாழுமிடம்
அன்னை நெஞ்சம் பாருங்கடி

நூறு சொந்தம் சுற்றியிருந்தும்
சொத்து சுகம் கொட்டியிருந்தும்

அன்னை அன்பு இல்லையென்றால்
இன்பம் அங்கு இல்லையடி

அன்னை எந்தன் தெய்வமடி
அன்னை அன்பு சுத்தமடி

அன்னை எந்தன் பக்கமிருந்தால்
வேறு தெய்வம் ஏதுக்கடி

AMMA

 Amma Amma Amma
I wants you always amma


First I saw you Amma
First I felt you Amma

The word I told first Amma
The word I wrote first Amma

You are so kind Amma
Your love is perfect Amma

I like to be with you Amma
I like to respect Amma

You kiss me always Amma
I pray you always Amma

How many people I saw
Nobody is like Amma

You are my soul Amma
I need you for ever Amma

வெளிநாடு

தரையினில் அமர்ந்து தாயின் மடியில்
தலைவைத்து உறங்கும் தாழாத சுகமது
பஞ்சு மெத்தையில் பட்டு விரிப்பினில்
கொஞ்சும் இசையுடன் உறங்கிடில் வருமா???

கட்டாந் தரையினில் வட்டமாய் அமர்ந்து
கூட்டமாய் உண்டிடும் கொள்ளை சுகமது
எட்டாத் தூரத்தில் எல்லோரும் பிரிந்து 
கொட்டிய பணத்தில் கொள்ளை போனதே!!! 

நான் ஏழையா செல்வந்தனா?


அன்பினை பெற்றோர் தந்தார்
அறிவினைக் கற்றோர் தந்தார்
வீரத்தை எந்தை தந்தார்
வெற்றிக்காய் உழைக்க வைத்தார்

பிள்ளைகள் பெருமை தந்தார்
என்னவள் இன்பம் தந்தாள்
எல்லோரும் எல்லாம் தந்தார்
இறைவனின் கருணைதானோ

பணத்திற்காய் பணியா வீரம்
பதவிக்காய் அலையா பண்பு
உண்மைக்காய் உழைக்கும் எண்ணம்
உறவுக்காய் உதவும் உள்ளம்

ஊரினை உயர்த்தும் வேகம்
எதிரியாய் இருந்த போதும்
இடரினில் உதவும் உள்ளம்
அனைத்தையும் எந்தை தந்தார்
அவரே என் கடவுள் ஐயா

கோபத்தில் குறைந்தவன் அல்லன்
கயவர்க்குப் பயந்தவன் அல்லன்
சண்டைக்கும் சளைத்தவன் அல்லன்
சான்றோரை மதிப்பதில் வல்லன்
எவர் என்னை ஏழை என்பார்??? – ஆனாலும்

பொய்யில் நான் பரம ஏழை
போலியில் வறியோன் நானே
கள்ளமும் கபடமும் இல்லை
கயவரை மதிக்கவும் இல்லை
இவற்றில் நான் ஏழை தானே
என்னை யார் செல்வன் என்பார்
நீங்கள்தான் சொல்லுங்களேன்