சொர்க்கம் எங்கே சொர்க்கம்
எங்கே
சொல்லடா என்று கேட்டது என்மனம்
பணமே சொர்க்கம் என்றே கூறி
தினமும் அலையும் மனிதர் கண்டேன்
புகழே சொர்க்கம் என்று
நினைத்து
புகழின் பின்னே அலைந்தோர் கண்டேன்
மானம் காக்கும் மனமது தானே
மகிழ்ச்சி தந்த சொர்க்கம் என்றார்
கற்றல்தானே சொர்க்கம் என்று
கற்றார் கூற நானும் கேட்டேன்
குழந்தைச் சிரிப்பில் சொர்க்கம்
காணும்
குழந்தை மனங்கள் நானும் கண்டேன்
ஏழைச் சிரிப்பில் இன்பம்
காண்டார்
அதுவே தங்கள் சொர்க்கம் என்றார்
ஆண்டவன் அடியைப் போற்றுதல்தானே
அடியார் எமக்குச் சொர்க்கம் என்றார்
வெற்றி ஒன்றே சொர்க்கம்
என்று
வியர்வை சிந்தி உழைப்போர் கண்டேன்
மான்விழி காட்டி மயக்கும்
பெண்ணே
மனிதர் எமக்குச் சொர்க்கம் என்றார்
மற்றோர் துன்பம் களைவது
தானே
மனிதன் தேடும் சொர்க்கம் என்றார்
உந்தன் சொர்க்கம் எங்கே
என்று
உள்ளம் உரைக்கக் கேட்பாய் மனிதா!!!!
திரு.
அருள்
No comments:
Post a Comment